Tuesday, November 6, 2012

பெண்ணே நீ




ஏ முத்துத் தென்றலே,
என் முத்தக் காதலே...

வாழ்வும் நீயடி,
என் வாழ்கை நீயடி...
வாழ்ந்தோய்ந்து போகையில்,
என் ஆவி நீயடி...

தங்கம் நீயடி,
தேன் அங்கம் உனதடி,
பெண்ணே என்னடி??
என் ஊனும் நீயடி...

தண்ணீர் நீயடி,
என் செந்நீர் நீயடி...
பன்னீராய் ஆகையில்.
என் கண்ணீர் நீயடி...

சத்தம் நீயடி,
என் மொத்தம் உனதடி...
நீ சிப்பியாகையில் - அதில்
முத்து எனதடி...

உன்னால் உருகினேன்,
என்னை உருக்கி ஊற்றினாய்,
ஊற்றும்  வேளையில் - நான்
ஆவியாய் கரைகிறேன்...
ஆவியும் கலந்தது  - அது
மொத்தம் உன்னிடம்.

பார்த்துக்கொள்ளடி,
உன்னுள் நானடி...
உன்னை பார்த்துக்கொள்ளடி,
உன் பாதி நானடி!

No comments:

Post a Comment